எழுத நினைத்து மறந்து போன கவிதை ஒன்று நினைவில் வந்தது...
எழுத மீண்டும் மறந்து விட்டேன் அதை நினைத்துக்கொண்டே...
Welcome
Monday, May 24, 2010
வலி ...
பல வண்ணங்களில் ...
பல அளவுகளில் ...
தருகிறார்கள் மாத்திரையை ...
ஒரே மாதிரி தான் இருக்கிறது எல்லா வலிகளும்...
பல அளவுகளில் ...
தருகிறார்கள் மாத்திரையை ...
ஒரே மாதிரி தான் இருக்கிறது எல்லா வலிகளும்...
தொலைந்த ரசனை ..
ஒரு மழை இரவில் ....
மழையை ரசிக்க மறந்து தேடுகிறேன் தீ பெட்டியை...
மழையை ரசித்துகொன்டிருந்தது அது ...
ஜன்னல் ஓரம் வந்த சாரலில் நனைந்தபடியே..
மழையை ரசிக்க மறந்து தேடுகிறேன் தீ பெட்டியை...
மழையை ரசித்துகொன்டிருந்தது அது ...
ஜன்னல் ஓரம் வந்த சாரலில் நனைந்தபடியே..
மாற்றங்கள்..
முன்போல் விளையாட முடிவதில்லை...
முன்போல் தூங்க முடிவதில்லை..
முன்போல் உண்ண முடிவதில்லை...
முன்போல் சிரிக்க முடிவதில்லை...
முன்போல் சிந்திக்க முடிவதில்லை...
இன்று போல் நாளை இருக்க போவதுமில்லை...
இன்றுடனே இருந்து விடுகிறேன்...
முன்போல் என அடுத்த வரி என் கவிதையில் இடம் பெரும் முன்.
முன்போல் தூங்க முடிவதில்லை..
முன்போல் உண்ண முடிவதில்லை...
முன்போல் சிரிக்க முடிவதில்லை...
முன்போல் சிந்திக்க முடிவதில்லை...
இன்று போல் நாளை இருக்க போவதுமில்லை...
இன்றுடனே இருந்து விடுகிறேன்...
முன்போல் என அடுத்த வரி என் கவிதையில் இடம் பெரும் முன்.
நியதி...
தூக்கம் இல்லா இரவு ஒன்றில்....
தனிமை துணையில் நினைவு ஒன்று...
வாழ்க்கை எங்கு என்னை கூட்டிச்செல்கிறது ...?
பால் முதல் பால் வரை...
நான் முதல் நான் வரை ...
முடிவிற்காகவா தொடங்கினேன் ...?
கேள்விகள் தொடர்கிறது....
விடை தெரியாமல் தூங்கினேன் ...
எப்படி தூங்கினேன் ?
கேள்விகள் தொடர்கிறது...
தனிமை துணையில் நினைவு ஒன்று...
வாழ்க்கை எங்கு என்னை கூட்டிச்செல்கிறது ...?
பால் முதல் பால் வரை...
நான் முதல் நான் வரை ...
முடிவிற்காகவா தொடங்கினேன் ...?
கேள்விகள் தொடர்கிறது....
விடை தெரியாமல் தூங்கினேன் ...
எப்படி தூங்கினேன் ?
கேள்விகள் தொடர்கிறது...
Subscribe to:
Posts (Atom)