Welcome

Monday, May 24, 2010

எழுதா வார்த்தைகள்...

எழுத நினைத்து மறந்து போன கவிதை ஒன்று நினைவில் வந்தது...
எழுத மீண்டும் மறந்து விட்டேன் அதை நினைத்துக்கொண்டே...

சொட்டு சொட்டாய் ...

நிரம்பி வழியும் நினைவுகள்...
மூட மறந்த குழாய் போன்றிருக்கிறது கடந்த காலம்...

இவள்..

கடவுள் இருந்த இடத்தை இவள் நிறப்பினால்...
அவன் மொபைலின் screensaverல்...

வலி ...

பல வண்ணங்களில் ...
பல அளவுகளில் ...
தருகிறார்கள் மாத்திரையை ...
ஒரே மாதிரி தான் இருக்கிறது எல்லா வலிகளும்...

தொலைந்த ரசனை ..

ஒரு மழை இரவில் ....
மழையை ரசிக்க மறந்து தேடுகிறேன் தீ பெட்டியை...
மழையை ரசித்துகொன்டிருந்தது அது ...
ஜன்னல் ஓரம் வந்த சாரலில் நனைந்தபடியே..

ஆசை ...

கண் மூடிய புத்தர் சிலையை வாங்க "ஆசை" மட்டும் தான் இருந்தது.

மாற்றங்கள்..

முன்போல் விளையாட முடிவதில்லை...
முன்போல் தூங்க முடிவதில்லை..
முன்போல் உண்ண முடிவதில்லை...
முன்போல் சிரிக்க முடிவதில்லை...
முன்போல் சிந்திக்க முடிவதில்லை...
இன்று போல் நாளை இருக்க போவதுமில்லை...
இன்றுடனே இருந்து விடுகிறேன்...
முன்போல் என அடுத்த வரி என் கவிதையில் இடம் பெரும் முன்.

நியதி...

தூக்கம் இல்லா இரவு ஒன்றில்....
தனிமை துணையில் நினைவு ஒன்று...
வாழ்க்கை எங்கு என்னை கூட்டிச்செல்கிறது ...?

பால் முதல் பால் வரை...
நான் முதல் நான் வரை ...
முடிவிற்காகவா தொடங்கினேன் ...?
கேள்விகள் தொடர்கிறது....

விடை தெரியாமல் தூங்கினேன் ...
எப்படி தூங்கினேன் ?
கேள்விகள் தொடர்கிறது...

அவள்...

ஏதோ கவிதை எழுதுகிறார்கள் ஒரு பெண்ணிற்காக ....
கவிதை நான் எழுதுகிறேன் ஏதோ ஒரு பெண்ணிற்காக..