Welcome

Saturday, November 13, 2010

நினைவு...

சில வார்த்தைகள் மௌனத்தின் ஒலியாய் கேட்கின்றன ..
சில மௌனங்கள் வார்த்தைகளின் மௌனமாய் அமைகின்றன ..
பேசாத பேச்சுக்கள் கேட்டவண்ணமுள்ளன..
நிரம்பியும் வெற்றிடமாய் இருக்கின்றன ...
நினைவுகள்..!

ஒரு நொடி கடந்த காலம் ...

புகைப்படம் ஒன்று பார்க்க நேரிட்டது ..
அதனால் ஏனோ பல நியாபகங்கள் கிளறபடுகின்றன...
அந்த புகைபடத்தில் இருந்த முகங்கள் பெயர்களற்று
தம்மை காட்டிகொள்கின்றன..
சில முகங்களில் சிரிப்பும்..
சில முகங்களில் சந்தேகமும்..
சில முகங்களில் சோகமும் ..
கலந்து இருக்கின்றன ...
ஒரு புகைப்படம் எல்லா உணர்சிகளையும்
காண்பிக்க கூடியதாகவும் ..
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு உணர்ச்சியை தருவதாகவும் அமைகிறது..
என்னவாயினும் அவை காலத்தை
ஒரு நொடி அடக்கி வைத்துவிடுகின்றன ....

வரலாறு ...

பெரிதாய் எதுவும் ஆசை படாமல்
சிறிதாய் ஆசைப்பட்டு ...
அதுவும் நிறைவேறாமல் இறந்தவனை
புதைத்த இடத்தின் பக்கத்தில் கிடந்தது
புத்தனின் மண்டை ஓடு ....