Welcome

Tuesday, August 31, 2010

ஆண்- பெண் - பொம்மை ...

பெண்கள்-
ஏதோ ஒரு பொம்மையை கட்டி அனைத்து தூங்குகின்றனர் ...
அனால் அவர்கள் அந்த பொம்மையை நினைத்துகொண்டே உறங்குவதில்லை..
ஆண்கள் -
அவர்களுக்கு பொம்மைகள் தேவை படுவதில்லை ...

Friday, August 27, 2010

கேட்கா குரல் ..!

யார் கூப்பிடுவதும் கேட்பதில்லை...
எல்லோரும் என்னுடன் பேச கத்திகொண்டிருக்கிறார்கள்..
அமைதியாக ...
Silent modeல். !

நிலா கடவுள் !

கடவுள் எல்லாம் மேலே இருப்பதாய் பாட்டி சொன்னதை கேட்டு ..
மூச்சிரைக்க மாடிக்கு சென்ற சிறுவன்..
நிலாவை பார்த்ததும் கடவுளை தேட மறந்துவிட்டான்.

நிஜம்தான் !

அத்தனைக்கும் ஆசை படு ...
என்று இரகசியமாய் சொல்லிவிட்டு சென்றார் புத்தர்
என் கனவில்... !

Wednesday, August 11, 2010

நேரம்...

கவிதை எழுத நேரம் தேவை ...
இல்லாத பொழுதில்
சும்மா தான் இருக்கின்றேன்
ஏதோ செய்துகொண்டு ... !

நிசப்தம் ..

நிசப்தம் மிகவும் கொடூரமானது...
அதன் பேரொலியில் எழுந்து விடுகின்றன
எப்போதோ தூங்கிய
நினைவுகள் ... !

தேவை..

நிலை கொள்ளாமல் நினைவுகள்
நெருப்பைப்போல் மேல்நோக்கியே
செல்கின்றன...
அனைக்க கேட்கிறேன்
எதையாவது
அல்லது
யாரையாவது... !